Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 23, திங்கட்கிழமை
Gavitha / 2015 செப்டெம்பர் 03 , மு.ப. 07:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செல்வநாயகம் கபிலன்
கைகலப்பில் ஈடுபட்டு 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்ட பின்னர், பிணையில் விடுவிக்கப்பட்ட சந்தேகநபர்கள், புதன்கிழமை (02) மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்ட சம்பவம் சாவகச்சேரி நீதிமன்றில் இடம்பெற்றுள்ளது.
கொடிகாமம் கெற்;பேலி பகுதியில் மோதல் சம்பவத்துடன் தொடர்புடைய நான்கு சந்தேக நபர்கள், கொடிகாமம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.
பின்னர் அனைவரும் கடந்த மாதம் 26ஆம் திகதி பிணையில் விடுவிக்கப்பட்டனர். பிணையில் விடுவிக்கப்பட்டவர்கள் கிராம சேவையாளரால் உறுதிப்படுத்தபட்ட கடிதத்தை 1 வாரத்துக்குள் நீதிமன்றில் கையளிக்க வேண்டும் என்பது நடைமுறை.
மேற்படி நபர்கள் நால்வரும் கிராம சேவையாளரின் உறுதிப்படுத்தப்பட்ட கடிதத்தை வழங்க தவறியமை புதன்கிழமை (02) இடம்பெற்ற வழக்கின் போது மன்றின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டது.
இதன்போது சந்தேகநபர்கள், நீதிமன்றினை அவமதித்துள்ளதாக தெரிவித்த சாவகச்சேரி நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் செல்லையா கணபதிபிள்ளை, எதிர்வரும் 09ஆம் திகதி வரை அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
23 minute ago
27 minute ago