2025 ஜூன் 25, புதன்கிழமை

நீதிமன்றத்தில் அலைபேசி ஒலியெழுப்பியவருக்கு தண்டம்

Princiya Dixci   / 2015 செப்டெம்பர் 10 , பி.ப. 12:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்
 
கிளிநொச்சி நீதவான் நீதிமன்றத்தில் வழக்குகள் நடைபெற்றுக்கொண்டிருந்த வேளை அலைபேசி ஒலியெழுப்பிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவருக்கு 3,000 ரூபாய் தண்டப்பணம் விதித்து கிளிநொச்சி நீதவான் நீதிமன்ற நீதவான் எம்.ஐ.வகாப்தீன், நேற்று புதன்கிழமை (09) உத்தரவிட்டார்.
 
கிளிநொச்சி மாவட்;ட நீதவான் நீதிமன்;றத்தில் வழக்குகள் நடைபெற்றுக்கொண்டிருந்த வேளை அலைபேசி ஒலியெழுப்பி நீதிமன்றத்துக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் ஒருவரைக் கைது செய்த கிளிநொச்சிப் பொலிஸார், குறித்த நபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியதையடுத்து குற்றவாளிக்கு 3,000 ரூபாய் தண்டப்பணம் விதித்து நீதவான் உத்தரவிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .