2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

நிலவெடிப்பு அதிகரிப்பு

Gavitha   / 2016 ஜனவரி 26 , மு.ப. 03:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

செல்வநாயகம் கபிலன்

அச்சுவேலி நவக்கிரிப் பகுதியில், கடந்த 23ஆம் திகதி அதிகாலை, நிலத்தில் ஏற்பட்ட வெடிப்பு, 1.5 சதமமீற்றர் அகலத்துக்கு விகாரமடைந்துள்ளது.  

மேலும், புதிதாக சில இடங்களில் வெடிப்புக்கள் ஏற்பட்டுள்ளதுடன், வெடிப்பு ஏற்பட்ட பகுதி சற்றுக் கீழிறங்கியுள்ளது.

இந்த வெடிப்பு சுண்ணாம்புப் பாறைகளின் விரிசல்கள் காரணமாக ஏற்பட்டது என்றும், நிலநடுக்கத்தால் ஏற்படவில்லையெனவும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பேராசிரியர் யாழ் பல்கலைக்கழக புவியியல்துறை பேராசிரியர் ஏஸ்.ரீ.வீ.ராஜேஸ்வரன் கூறியிருந்தார்.

இந்நிலையில் வெடிப்பானது மேலும் விகாரமடைவதால் அப்பகுதி மக்களிடையே அச்சம் நிலவியுள்ளதாக அப்பகுதி கிராமஅலுவலர் தெரிவித்தார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X