2025 ஜூன் 28, சனிக்கிழமை

பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்

Gavitha   / 2015 ஒக்டோபர் 06 , பி.ப. 12:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.றொசாந்த்

2012ஆம் ஆண்டு மார்ச் மாதம் 30ஆம் திகதிக்கு முன்னர் பட்டப்படிப்பை நிறைவு செய்து, எதிர்வரும் 9 மற்றும் 10ஆம் திகதிகளில் நடைபெறவுள்ள நேர்முகப்பரீட்சைக்கு இதுவரையில் விண்ணப்பிக்காத பட்டதாரிகள், விண்ணப்பிக்க முடியும் என வேலையற்ற பட்டதாரிகளின் விவகாரங்களைக் கவனிப்பது தொடர்பில் அமைக்கப்பட்டுள்ள வடக்கு மாகாணசபையின் விசேட செயலணி தெரிவித்துள்ளது.

2012ஆம் ஆண்டு மார்ச் மாதம் 30ஆம் திகதிக்கு முன்னர் பட்டப்படிப்பை நிறைவு செய்த பட்டதாரிகளுக்கு, அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான நியமனங்கள் வழங்கப்படவுள்ளன. இதற்கான நேர்முகத் தேர்வு, எதிர்வரும் 9ஆம் மற்றும் 10ஆம் திகதிகளில் நடைபெறும் என பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு அறிவித்துள்ளது.

ஏற்கெனவே விண்ணப்பித்திருந்தவர்களுக்கு மேற்படி நேர்முகத் தேர்வுக்கான அனுமதிக் கடிதங்கள், அமைச்சினால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. எனினும், அதே திகதிக்கு முன்னர் பட்டப்படிப்பை பூர்த்தி செய்து குறித்த பதவிக்கு விண்ணப்பிக்காத பட்டதாரிகளும் தங்கள் சுயவிபரங்களையும், தங்களை நேர்முகத் தேர்வுக்கு இணைத்துக் கொள்ளுமாறு கேட்கும் கோரிக்கை கடிதத்தினையும் இணைந்து, செயலாளர் பொதுநிர்வாக அமைச்சு, சுதந்திர சதுக்கம், கொழும்பு 07 என்ற முகவரிக்கு, பதிவுத் தபாலில் அனுப்பி வைக்குமாறு மாகாணசபையின் விசேட செயலணி கேட்டுக்கொண்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .