Editorial / 2020 ஓகஸ்ட் 23 , பி.ப. 02:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
-என்.ராஜ்
உள்நாட்டு பறவைகள், வலசப் பறவைகளைப் பாதுகாப்பு தொடர்பான விசேட கலந்துரையாடலொன்று, யாழ்ப்பாணப் யாழ் பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்றது.
இதில் பல்கலைக்கழக தாவரவியல், விலங்கியல் விரிவுரையாளர்கள், மாணவர்கள் கலந்துகொண்டனர்.
தாவரவியல் பீடத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்தக் கலந்துரையாடலில் வடமாகாணத்தில் காணப்படும் வலசைபறவைகளை எவ்வாறான முறையில் பாதுகாப்பது, வெளிநாட்டு பறவைகள் மற்றும் உள்நாட்டு பறவைகள் வந்திறங்கும் நீர்நிலைகளை மக்கள் நடமாட்டமில்லாதவாறு பாதுகாத்தல், பறவைகள் தங்கும் இடங்களில் காணிகள் அபகரிப்பை தடுத்தல் போன்ற விடயங்கள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டன.
அத்துடன், எதிர்வரும் காலத்தில் இவ்வாறான வலசைப் பறவைகள் மற்றும் உள்நாட்டு பறவைகளைப் பாதுகாப்பதற்காக விசேட குழு ஒன்றை அமைத்து, அதனை செயற்படுவதாகவும், அக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
இந்தச் சந்திப்பில் விலங்கியல்துறை விரிவுரையாளர் ரகுபதி, துறைசார் விரிவுரையாளர்கள் அதிகாரிகள் கலந்துகொண்டு, தமது கருத்துகளை முன்வைத்திருந்தனர்.
18 minute ago
38 minute ago
46 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
38 minute ago
46 minute ago
1 hours ago