2025 ஜூன் 26, வியாழக்கிழமை

பொதுமக்களுக்கு வேட்​பாளர் அச்சுறுத்தல்

Editorial   / 2018 பெப்ரவரி 10 , மு.ப. 10:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

-டி.விஜிதா

அரச கட்சியின் வேட்பாளர் ஒருவர், தமக்கு வாக்களிக்குமாறும் அவ்வாறு வாக்களிக்கத்தவறினால் சமுர்த்தி வெட்டுவோம் எனவும் அச்சுறுத்தியுள்ளதாக, பொதுமக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

யாழ். ஒஸ்மானியா கல்லூரியில் உள்ள வாக்களிப்பு நிலையத்துக்குச் சென்ற பொதுமக்களுக்கே, இவ்வாறு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த வேட்பாளர், வாக்களிப்பு நிலையத்தில் நின்று வாக்களிக்கச் சென்ற பொதுமக்களிடம் தமக்கு வாக்களிக்குமாறும் அவ்வாறு வாக்களிக்கத்தவறினால் சமுர்த்தி கொடுப்பனவுகளை நீக்குவோம் என்றும் அச்சுறுத்தல் விடுத்துள்ளனர்.

இவ்வாறான அச்சுறுத்தலினால் பொதுமக்களிடையே அச்சம் நிலவி வருகின்றதுடன், வாக்களிக்காவிடின் தமது சமுர்த்தி கொடுப்பனவுகளை நீக்கிவிடுவார்களோ என்ற அச்சத்தில் தமது வாக்குகளை யாருக்கு அளிப்பதென்ற குழப்பத்தில் வாக்களித்து வருகின்றனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .