2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

புகையிலை நாற்று மேடைகளை அமைப்பதில் வடமராட்சி விவசாயிகள் ஆர்வம்

Gavitha   / 2016 நவம்பர் 02 , மு.ப. 11:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.கர்ணன்

வடமராட்சி பிரதேசத்திலுள்ள விவசாயிகள் புகையிலை செய்கைக்கான புகையிலை நாற்று  மேடைகளை அமைப்பதில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

அண்மையில் பெய்த சிறுமழையை அடுத்து  வடமராட்சி பிரதேசத்தில் திக்கம், மந்திகை, புலோலி, அல்வாய், கரணவாய் போன்ற இடங்களில், புகையிலை நாற்று மேடைகளை  அமைப்பதில்  புகையிலை செய்கையாளர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

எதிர்வரும் டிசெம்பர் மாதத்தில்  புகையிலை நாற்றுக்கள் நடுகை செய்யப்படும்.

இதேவேளை குடாநாட்டில் புகையிலைப் பயிர்ச் செய்கையை  மேற்கொள்ளும்  வலிகாமம், தென்மராட்சி, தீவகத்தைச் சேர்ந்த விவசாயிகள்,  வடமராட்சி விவசாயிகளிடமிருந்து  புகையிலை நாற்றுக்கள் பெற்றுக்கொள்வது வழக்கமாகும்.

ஆனால், இம்முறை தீவகத்தில் புகையிலைப் பயிர்ச்செய்கை மேற்கொள்ள பிரதேச செயலகத்தால்  தடைவிதிக்கப்பட்டுள்ளது.

பணப்பயிரான புகையிலையை பயிர்ச்செய்கை மேற்கொள்வதை, எதிர்வரும் 2020ஆம்  ஆண்டளவில்  நிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வரும் நிலையில், விவசாயிகளுக்கு மாற்றுப்பயிர் தொடர்பான விபரங்களையோ, விளக்கங்களையோ வழங்குவதற்கு விவசாயத் திணைக்களம் இதுவரை எவ்வித ஆக்கபூர்வமான நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை என்பது சுட்டிக்காட்டத்தக்கது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X