2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

புங்குடுதீவு மாணவி கொலை: சந்தேகநபர்களின் அச்சுறுத்தல் காணொளி மன்றில் சமர்ப்பிப்பு

Princiya Dixci   / 2016 செப்டெம்பர் 07 , மு.ப. 05:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

- எம்.றொசாந்த்

புங்குடுதீவு மாணவியின் கொலைச் சந்தேகநபர்கள், தம்கைக் கைதுசெய்த பொலிஸ் உத்தியோகத்தரைக் கொலை செய்வோம் என அச்சுறுத்தல் விடுத்த காணொளியை, ஊடகவியலாளர் ஒருவர் ஊர்காவற்றுறை நீதவான் ஏ.எம்.எம்.றியாலிடம் நேற்றுச் செவ்வாய்க்கிழமை (06) சமர்ப்பித்துள்ளார்.

புங்குடுதீவு மாணவி கொலை வழக்கில் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள, சந்தேகநபர் ஒருவர் தம்மைக் கைதுசெய்த ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகஸ்தரைக் கொலை செய்வேன் என நீதிமன்ற வளாகத்தினுள் வைத்து அச்சுறுத்தல் விடுத்திருந்தார்.

அது தொடர்பில் செய்தி வெளியிட்ட ஊடக நிறுவனத்திடம், கொலை அச்சுறுத்தல் விடுத்தமை தொடர்பான ஆதாரத்தை நீதிமன்றம் கோரியிருந்தது.

இந்நிலையில், கொலை அச்சுறுத்தல் விடுத்தமை தொடர்பான காணொளி ஆதாரதை, குறித்த ஊடக நிறுவன ஊடகவியலாளர் நீதவானிடம் சமர்ப்பித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X