2025 ஜூன் 22, ஞாயிற்றுக்கிழமை

புங்குடுதீவு மாணவி கொலை: மீண்டும் டீ.என்.ஏ பரிசோதனை

Gavitha   / 2015 ஓகஸ்ட் 27 , மு.ப. 04:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

சொர்ணகுமார் சொரூபன்

புங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்ட வழக்கின் சந்தேகநபர்கள்; 9பேரையும் மீண்டும் டீ.என்.ஏ மரபணுப் பரிசோதனைக்கு உட்படுத்துமாறு சட்ட வைத்திய அதிகாரிக்கு உத்தரவிட்ட ஊர்காவற்றுறை நீதவான் செல்வநாயம் லெனின்குமார், இப்பரிசோதனையை நேற்று புதன்கிழமையே (26) மேற்கொள்ளுமாறும் பணித்தார்.  

மேலும், இந்தக் கொலை தொடர்பில் பெறப்பட்ட தடயப் பொருட்களை மொறட்டுவ பகுப்பாய்வு பிரிவுக்கு விரைந்து அனுப்புமாறும் நீதவான் உத்தரவிட்டதுடன், சந்தேகநபர்களை எதிர்வரும் செப்ரெம்பர் மாதம் 1ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கவும் கட்டளையிட்டார்.

அத்துடன், நீதிமன்றத்தின் மறுஅறிவித்தல் வரும்வரையில் சந்தேகநபர்களின் முதலாவது டீ.என்.ஏ பரிசோதனை அறிக்கையை பாதுகாக்குமாறு அரச பகுப்பாய்வு திணைக்களத்துக்கு உத்தரவிட்டார்.

புங்குடுதீவு மாணவி, கடந்த மே மாதம் 13ஆம் திகதி கூட்டு வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் 9 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், இது தொடர்பான வழக்கு, ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .