2025 ஜூன் 25, புதன்கிழமை

பெண்களுக்கு தொந்தரவு கொடுத்த இருவருக்கு விளக்கமறியல்

Princiya Dixci   / 2015 செப்டெம்பர் 12 , மு.ப. 05:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

நெல்லியடி பஸ் நிலையத்தில் பெண்களுக்கு தொடர்ச்சியான பாலியல் தொந்தரவு கொடுத்த இருவரை, எதிர்வரும் 15ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பருத்தித்துறை நீதவான் நீதிமன்ற நீதவான் மா.கணேசராசா, வியாழக்கிழமை (10) உத்தரவிட்டார்.

பஸ்ஸூக்காக காத்திருக்கும் பெண்களுக்கு அநாகரீகமான சைகள் காட்டியும் கடதாசியில் தங்கள் அலைபேசி இலக்கங்களை எழுதி பெண்களுக்குக் கொடுக்க முனைந்த இரண்டு சந்தேகநபர்களையும் சிவில் உடையில் பஸ் நிலையத்தில் நின்ற பொலிஸார் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்திய போது, அவர்களை எச்சரிக்கை செய்த நீதவான், விளக்கமறியலில் வைத்தார். 

அத்துடன், இவ்வாறான செயல்களில் ஈடுபடும் இளைஞர்களைக் கைது செய்யுமாறும் நீதவான் உத்தரவிட்டார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .