2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

பெண்ணின் தாலிக்கொடி அறுப்பு

Princiya Dixci   / 2016 நவம்பர் 22 , மு.ப. 06:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

செல்வநாயகம் கபிலன்

பெண்ணொருவரின் 4½ பவுண் தாலி அறுத்தெடுக்கப்பட்ட சம்பவம், பண்டத்தரிப்பு பகுதியில் நேற்றுத் திங்கட்கிழமை (21) மாலை இடம்பெற்றுள்ளது.

துவிச்சக்கரவண்டியில் சென்றுகொண்டிருந்த மேற்படிப் பெண்ணைப் பின் தொடர்ந்து வந்த கொள்ளையர்கள், யாரும் இல்லாத நேரம் பார்த்து தாலிக் கொடியினை அறுத்தெடுத்துச் சென்றுள்ளனர்.

இச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண், இளவாலை பொலிஸ்  நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

மேலதிக விசாரணைகளை இளவாலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X