2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

பெண் மீது கல்வீச்சுத் தாக்குதல்

George   / 2016 ஜனவரி 22 , மு.ப. 11:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நா.நவரத்தினராசா

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சில்லறைப் பொருட்களை விற்று பிழைப்பு நடத்திவரும் நடத்திவரும் இளம்பெண் மீது வைத்தியசாலை பாதுகாப்பு உத்தியோகத்தர்கள், வெள்ளிக்கிழமை (22) கல்வீச்சுத் தாக்குதல் மேற்கொண்டதில் பெண் தலையில் படுகாயமடைந்தார்.

வெளிநோயாளர் சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற வந்தவர்களிடம் மேற்படி பெண் வியாபாரம் செய்தபோது, பெண்ணை வெளியில் செல்லுமாறு கூறி பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் விரட்டினர். 

வெளியில் சென்ற பெண் வைத்தியசாலை நுழைவாயில் முன்பாக நின்றுகொண்டிருந்த பொதுமக்களுக்கு பொருட்களை விற்பனை செய்துள்ளார்.

இதன்போது, அங்கு வந்த வைத்தியசாலை பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் பெண் மீது கல்வீச்சுத் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். இதில் பெண் காயமடைந்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X