2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

புதுக்குடியிருப்பில் சந்தை மற்றும் நூலகம் அமைக்க நடவடிக்கை

Niroshini   / 2016 மார்ச் 14 , மு.ப. 04:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

நெல்சிப் திட்டத்தின் கீழ், 20 மில்லியன் ரூபாய் செலவில், முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் சந்தை மற்றும் நூலகம் என்பன அமைக்கப்படவுள்ளதாக பிரதேச சபை தகவல்கள் தெரிவிக்கின்றன.

புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் 2010ஆம் ஆண்டு மக்கள் மீள்குடியேறிய நிலையில், அங்கு சந்தையொன்று அமைக்கப்படாமல் கடந்த 5 வருடங்களாக தற்காலிக கொட்டகைகளில் சந்தை இயங்கி வந்தது.

தொடர்ந்து, 2015ஆம் ஆண்டு அரசசார்பற்ற நிறுவனத்தின் நிதியுதவியில் மீன்சந்தைக்கான கட்டடம் அமைக்கப்பட்டது.

இந்நிலையில், 11 மில்லியன் ரூபாய் செலவில் சந்தை அமைக்கப்படவுள்ள அதேவேளை, 9 மில்லியன் ரூபாய் செலவில் சிவநகர் பகுதியில் பிரதேச சபை பொதுநூலகம் அமைக்கப்படவுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X