Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை
Gavitha / 2015 ஒக்டோபர் 08 , பி.ப. 01:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
இனப்பிரச்சினை சம்பந்தமாக அரசியல் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, கூறிய கருத்து தொடர்பில் தனக்கு சந்தேகம் உள்ளதாகக்கூறி, தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு கடிதமொன்றை வியாழக்கிழமை (08) அனுப்பியுள்ளார்.
இனப்பிரச்சனை சம்பந்தமாக விரைவில் நடவடிக்கை எடுக்கவிருப்பதற்கு நன்றி தெரிவித்து கொள்வதாகவும், ஜப்பானிய நாடாளுமன்றத்தில், பிரதமர் ரணில் ஆற்றிய உரையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனும் வேறு அரசியல் கட்சிகளுடனும் பேச்சுவார்த்தை ஆரம்பிக்கப்பட்டுவிட்டதெனவும் விரைவில் தீர்வு காணப்படும் என்று குறிப்பிட்டமை மற்றும் நாடாளுமன்றத்தில் அங்கத்துவம் வகிக்கின்ற கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படவிருப்பதாக கூறியமை தொடர்பில் சந்தேகம் ஏற்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், 'பேச்சுவார்த்தையில் ஈடுபடவிருப்பவர்களோடு, நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்காத தமிழ்பேசும் மக்களின் கட்சிகளையும் இணைத்துக் கொள்ள வேண்டும் என தான் வினயமாக ரணில் விக்கிரமசிங்கவிடம் கேட்டுக் கொள்வதாகவும் ஒரேயொரு கட்சியுடன் மட்டும் பேசுவதால் அது உரிய பலனை தராது பாதிப்பையே ஏற்படுத்தும் எனவும் கூறியுள்ளார்.
'தமிழர் விடுதலைக் கூட்டணி ஒரு மிதவாத கட்சி. கடந்தக் காலத்தில், அக்கட்சி 18 நாடாளுமன்ற உறுப்பினர்களை கொண்டிருந்ததோடு எதிர்கட்சித் தலைவரை தெரிவு செய்யும் பலமும் அதற்கிருந்தது. இன்று அந்த நிலைமையில்லை
2004ஆம் ஆண்டு, எவ்வாறு தமிழர் விடுதலைக் கூட்டணியின் பிரதிநிதித்துவம் முற்றாக அழிக்கப்பட்டது என்பதை நினைவுபடுத்த விரும்புகின்றேன். உங்களுடைய தேசிய அரசாங்கத்தில் ஏனைய தமிழ்க் கட்சிகளின் நிலைப்பாடு என்னவென்பதை அறிய விரும்புகிறேன்' என்றும் அக்கடிதத்தில் கேட்டுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
50 minute ago
5 hours ago
6 hours ago