Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 23, திங்கட்கிழமை
Gavitha / 2015 செப்டெம்பர் 02 , பி.ப. 12:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
செல்வநாயகம் கபிலன்
பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டில் கைதான பாடசாலை அதிபரை தொடர்ந்தும் 15ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு சாவகச்சேரி நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் செல்லையா கணபதிபிள்ளை, செவ்வாய்க்கிழமை (01) உத்தரவிட்டார்.
சந்தேகநபர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி, அதிபருக்கு பிணை வழங்குமாறு மன்றில் கோரியிருந்தார்.
இதற்கு ஆட்சேபனை தெரிவித்த சாவகச்சேரி பொலிஸார், சந்தேக நபர் அங்கு கல்வி கற்கும் மாணவிகளை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கியதற்கு சாட்சிகள் இருப்பதாக கூறி பிணை வழங்க மறுப்பு தெரிவித்தனர்.
மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்குமாறு சாவகச்சேரி பொலிஸாருக்கு உத்தரவிட்ட நீதவான், சந்தேகநபரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
11 minute ago
31 minute ago
1 hours ago