2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

புல்லுக்குளத்தின் குளக்கட்டு சேதம்

Gavitha   / 2015 செப்டெம்பர் 28 , பி.ப. 01:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

குணசேகரன் சுரேன்

யாழ்ப்பாண நகரில் அமைந்துள்ள புல்லுக்குளத்தின் அணைக்கட்டின் தெற்கு பகுதியிலுள்ள மேடை இடிந்து குளத்துக்குள் விழுந்து சேதமடைந்துள்ளது.

நகர அபிவிருத்தி அதிகார சபையும் மாநகர சபையும் இணைந்து,  புல்லுக்குளத்தைச் சுற்றுலா மையமாக மாற்றும் நடவடிக்கையின் கீழ் 2012ஆம் ஆண்டு குளம் புனரமைக்கப்பட்டு, அணைக்கட்டுக்கள் பலப்படுத்தப்பட்டன.

அத்துடன், குளத்திலிருந்த கழிவுகள் அகற்றப்பட்டு, குளத்தைச் சுற்றிலும் கல் இருக்கைகள் அமைக்கப்பட்டன.

புனரமைக்கப்பட்ட இந்தக் குளம் தொடர்ந்தும் பேணும் நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை. கடந்த வருடம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ யாழ்ப்பாணம் வருகை தந்த போது, இந்தக் குளம் துப்பரவு செய்யப்பட்டது. அதன்பின்னர் குளம் பராமரிப்பின்றியிருந்தது.

இந்நிலையில் குளத்தின் அணைக்கட்டு, கல் இருக்கைகள் உடைந்தும் குளத்தின் நீர் குப்பைகளால் அசுத்தமாகியும் உள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .