2025 ஜூன் 25, புதன்கிழமை

பொலிஸ் காவலரண் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்

Gavitha   / 2015 செப்டெம்பர் 13 , மு.ப. 11:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.குகன்

அரியாலை பூம்புகார் கிராமத்தில் தமது பாதுகாப்புக் கருதி பொலிஸ் காவலரண் ஒன்றை அமைத்துத்தருமாறு, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்திருந்த நிலையில் அது தொடர்பாக உயர் அதிகாரிகளுடன் கலந்துரையாடி நடவடிக்கை எடுக்கப்படுமென யாழ். பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி யூ.கே.வூட்லர் உறுதியளித்துள்ளார்.

அரியாலை பூம்புகார் கிராம பகுதியில் இடம்பெற்ற பொலிஸார் மற்றும் மக்கள் சந்திப்பின்போதே அப்பகுதி மக்களால் இக்கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதியில் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்கின்றனர். இங்கு இளைஞர்கள் சிலர் மதுபோதையில் தேவையற்ற சண்டைகளிலும் வாள் வெட்டுக்களிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

அத்துடன் தனிமையிலுள்ள பெண்களுடன் சேட்டை புரிவது ஏனைய வெளியிடங்களில் கொள்ளை, கடத்தல் போன்ற செயற்பாடுகளில் ஈடுபட்டுவிட்டு இங்கு வந்து தங்கியிருப்பது என்று பல்வேறு பிரச்சினைகளால் தாம் நிம்மதியாகவும் அமைதியாகவும் வாழ முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்றும் இதற்கு நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் எனக் கோரி அம்மக்கள் யாழ். பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியிடம் முறையிட்டுள்ளனர்.

இதன்போது மக்களின் கோரிக்கைக்கு யாழ். பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி யூ.கே.வுட்லர் கருத்துத் தெரிவிக்கையில்,
'இக் கிராமமானது இங்கு வாழ்கின்ற மக்களுடையது. இங்குள்ளவர்கள் தேவையற்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவது மக்களைப் பாதிப்புக்குள்ளாக்கும். அத்துடன் வெளியிடங்களில் தேவையற்ற சட்டவிரோதச் செயல்களில் ஈடுபடுவோருக்கு இங்கு இடமளிக்கவேண்டாம்' எனக் கேட்டுக் கொண்டதுடன், 'தினமும் பொலிஸ் அதிகாரிகள் இக் கிராமத்தினை கண்காணிப்புச் செய்வார்கள். மீறி சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் இனங்காணப்பட்டால் அவர்கள் மீது கடுமையான சட்டநடவடிக்கை எடுக்கப்படும். மக்களின் பாதுகாப்பை கருத்திற் கொண்டு விரைவில் சிறிய பொலிஸ் காவலரண் ஒன்று அமைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்' என அவர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .