Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 22, ஞாயிற்றுக்கிழமை
Gavitha / 2015 ஓகஸ்ட் 27 , மு.ப. 04:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.றொசாந்த்
தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலாளர் நிஷா பிஸ்வாலுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிரதிநிதிகளுக்கும் இடையில் கொழும்பில் நேற்று புதன்கிழமை (26) நடைபெற்ற சந்திப்பின் போது தனக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.
நீர்வேலியிலுள்ள அவரது அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், 'இந்தச் சந்திப்பு தொடர்பில் நான் அறிந்திருந்தேன். கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சிகளில் ஒருவராக இருந்தும் எனக்கு கூட்டமைப்பு தலைமையிடம் இருந்து எவ்வித அழைப்பும் கிடைக்கவில்லை' என்றார்.
இதேவேளை, 'கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்ட விடயங்களை கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நடைமுறைப்படுத்தும் போதே தமிழ் மக்களுக்கான தீர்வைப் பெற்றுக்கொள்ள முடியும். அதனை விடுத்து மாற்று வழிகளில் நடந்துகொண்டால் தமிழ் மக்களுக்கான நிரந்தர தீர்வை எப்போதும் பெற்றுக்கொள்ள முடியாது' என்றும் அவர் குறிப்பிட்டார்.
'கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்தில், வடக்கு - கிழக்கு இணைந்த தமிழர் பிரதேசத்தில் ஒரு சுயாட்சியைப் பெற்றுக்கொள்வதற்கான விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. அதுவே தமிழ் மக்களுக்கான நிரந்தர தீர்வைப் பெற்றுத்தரும்.
அதனைவிடுத்து வேறு விடயங்களை நாடினால் பிரச்சினைகள் தீரக்கப்படாது. 13 பிளஸ் நடைமுறைப்படுத்தல் போன்றவை தமிழர்களின் பிரச்சினைக்கு தீர்வைப் பெற்றுத்தராது. இது வரலாற்று ரீதியான அனுபவம்' என்றும் பிரேமசந்திரன் கூறினார்.
'சிலவேளையில் ஐ.நா விசாரணை அறிக்கையில் உள்ளக விசாரணை என்னும் விடயம் கூறப்பட்டு, அது ஐ.நா மேற்பார்வையின் கீழ் செய்யப்படவேண்டும் என உலக நாடுகளும் கூறக்கூடும். அது நிச்சயமாக குற்றம் புரிந்தவர்களை தண்டிக்காது. இலங்கை அரசாங்கம் உள்ளக விசாரணை பொறிமுறையில் கீழ் மட்டத்தில் உள்ள சிலருக்கு மட்டும் தண்டனை வழங்கும்.
சர்வதேச விசாரணை என்பதற்கு அப்பால் சென்று, குற்றங்கள் இடம்பெற்றமைக்கான காரணம், தமிழ் மக்களின் பிரச்சினைகள் மீண்டும் குற்றங்கள் ஏற்படுவதை தடை செய்தல், பிரச்சினைகளை தீர்ப்பது போன்ற விடயங்கள் ஏற்படுத்தவே சர்வதேச விசாரணை அவசியம் என நாங்கள் கோருகின்றோம். உள்ளக என்னும் விடயத்தை எதிர்த்து சர்வதேச விசாரணை நடைபெறுவதற்கு புதிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் செயற்படவேண்டும். மீள்குடியேற்றம், இராணுவ வெளியேற்றம் ஆகியவை தொடர்பில் முக்கிய கவனம் செலுத்தப்பட வேண்டும்' என்று சுரேஸ் பிரேமசந்திரன் மேலும் கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
33 minute ago
41 minute ago
48 minute ago
55 minute ago