2025 ஜூலை 19, சனிக்கிழமை

மணல் அகழந்தவர் கைது

Princiya Dixci   / 2016 ஜனவரி 29 , மு.ப. 09:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

பளை, இத்தாவில் பகுதியில் சட்டவிரோதமான முறையில் உழவு இயந்திரத்தில் மணல் அகழந்து சென்ற நபரை, வெள்ளிக்கிழமை (29) அதிகாலை கைதுசெய்துள்ளதாக பளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

வீட்டுத்தேவை ஒன்றிற்கு கொண்டு செல்லும் நோக்கில் இவர் மணல் அகழ்ந்துள்ளதாக பொலிஸார் கூறினர்.

கைதானவர், அதே பகுதியினை சேர்ந்த 23 வயதுடைய நபர் என பொலிஸார் மேலும் கூறினர்.

சந்தேகநபருக்கு எதிராக கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X