2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

மணல் அகழ்வில் ஈடுபட்டவருக்கு அபராதம்

Princiya Dixci   / 2016 ஓகஸ்ட் 11 , மு.ப. 07:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

-  சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி, பன்னங்கண்டி பகுதியில் மணல் அகழ்வில் ஈடுபட்டவருக்கு ஒரு இலட்சம் ரூபாய் அபராதம் விதித்து கிளிநொச்சி நீதிவான் நீதிமன்றில் நீதிமன்ற நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராஜா, புதன்கிழமை (10) உத்தரவிட்டார்.

பன்னங்கண்டிப் பகுதியில் மணல் அகழ்விற்கு பயன்படுத்தும் உபகரணத்தைப் பயன்படுத்தி உழவு இயந்திரத்தின் மூலம் மணல் அகழ்வில் ஈடுபட்ட ஒருவரை கைது செய்த கிளநொச்சி பொலிசார் குறித்த உபகரணத்தையும் சந்தேகநபரையும் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தினர்.

இதன்போது அபராதம் விதிக்க உத்தரவிட்ட நீதிவான் மண் அகழ்வு உபகரணத்தையும் அழிக்குமாறும் உத்தரவிட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X