2025 ஜூலை 19, சனிக்கிழமை

மணல் கடத்தியவருக்கு அபராதம்

Menaka Mookandi   / 2016 ஜனவரி 13 , மு.ப. 05:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

சட்டவிரோதமான முறையில் மணல் அகழ்ந்து டிப்பர் வாகனத்தில் எடுத்துச்சென்ற சாரதியொருவருக்கு 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து சாவகச்சேரி நீதவான் நீதிமன்ற நீதவான் திருமதி ஸ்ரீநிதி நந்தசேகரன் செவ்வாய்க்கிழமை (12) தீர்ப்பளித்தார்.

சாவகச்சேரி பொலிஸாரால் டிப்பர் சாரதிக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு, செவ்வாயன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது, சந்தேகநபர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதைத் தொடர்ந்து. அவருக்கு அபராதம் விதித்து தீர்ப்பளித்த நீதவான், மணலை பறிமுதல் செய்யுமாறு பொலிஸாருக்கு பணித்தார்.

அத்துடன் டிப்பர் வாகனத்தினை, அதன் உரிமையாளரிடம் ஒப்படைக்குமாறு சாரதிக்கு உத்தரவிட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X