2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

மதவடியில் பணம், நகை திருட்டு

Princiya Dixci   / 2015 ஒக்டோபர் 29 , மு.ப. 05:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

- சொர்ணகுமார் சொரூபன்

காங்கேசன்துறை வீதி மதவடிப் பகுதியில் வீட்டுக்குள் நேற்று புதன்கிழமை (28) அதிகாலை உள்நுழைந்து அங்கிருந்து 5 இலட்சத்து 46 ஆயிரம் ரூபாய் பெறுமதியான நகை மற்றும் பணம் ஆகியவை திருடியுள்ளதாக யாழ்ப்பாணப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

வீட்டிலிருந்தவர்கள் தூங்கிக் கொண்டிருந்த தருணம், கதவு வழியாக உள்நுழைந்து இத்திருட்டு இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .