2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

மது போதையில் வாகனம் செலுத்திய இரு சாரதிகளுக்கு கட்டாயச்சிறை

Gavitha   / 2015 செப்டெம்பர் 22 , மு.ப. 07:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி பகுதியில் மது போதையில் வாகனம் செலுத்திய இரு சாரதிகளுக்கு 15,000 ரூபாய் தண்டப்பணம் விதித்ததுடன், இரண்டு மாத கட்டாயச்சிறைத்தண்டனையையும் விதித்து, கிளிநொச்சி நீதவான் நீதிமன்ற நீதவான் எம்.ஐ.வகாப்தீன் திங்கட்கிழமை (21) உத்தரவிட்டார்.

மேலும் இவர்களுடைய சாரதி அனுமதிப் பத்திரங்கள் ஒரு வருட காலத்துக்கு இடை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை கிளிநொச்சி ஏ-9 வீதியில் காப்புறுதிப்பத்;திரமின்றி வாகனம் செலுத்திய ஒருவருக்கு 5,000 ரூபாய் தண்டப்பணம் விதிக்கப்பட்டதுடன், அதிக வேகத்திலும் தவறான முறையிலும் வாகனம் செலுத்திய நான்கு பேருக்கு தலா 1,500 ரூபாயும், தலைக்கவசம் இன்றி மோட்டார் சைக்கிள் செலுத்திய இருவருக்கு தலா 1,000 ரூபாயும் தண்டப்பணம் விதித்து நீதவான் தீர்ப்பளித்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .