Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 25, புதன்கிழமை
Princiya Dixci / 2015 செப்டெம்பர் 11 , மு.ப. 10:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சுப்பிரமணியம் பாஸ்கரன்
மேலதிகமாக கள் வைத்திருந்தவர்கள் என பொய்க்குற்றச்சாட்டு தங்கள் மீது போடப்பட்டுள்ளதாக சந்தேகநபர்கள் நீதிமன்றத்தில் தெரிவித்தமையடுத்து, வழக்குப் பதிவு செய்த கிளிநொச்சி மாவட்ட மதுவரித் திணைக்கள அதிகாரிகளை, எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 02ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு கிளிநொச்சி நீதவான் நீதிமன்ற நீதவான் எம்.ஐ.வகாப்தீன், நேற்று வியாழக்கிழமை (10) உத்தரவிட்டார்.
இது தொடர்பில் தெரியவருவதாவது,
கிளிநொச்சி, கணேசபுரம் மற்றும் உருத்திரபுரம் ஆகிய பகுதிகளில் மேலதிக கள் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 5 பேருக்கு எதிராக கிளிநொச்சி மாவட்ட மதுவரித் திணைக்கள அதிகாரிகள் கிளிநொச்சி நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்தனர்.
வழக்கு நேற்று வியாழக்கிழமை (10) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, இரண்டு பேர் தமது குற்றங்களை ஒப்புக்கொண்டதையடுத்து, அவர்கள் இருவருக்கு தலா 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து நீதவான் தீர்ப்பளித்தார்.
தாங்கள் மேலதிகமாக கள் எதனையும் வைத்திருக்கவில்லையெனவும் தங்களை மதுவரித் திணைக்கள அலுவலகத்துக்கு வரவழைத்து தங்களுக்கு எதிராக வழக்குகளை பதிவு செய்து நீதிமன்றத்தில் குற்றத்தை ஒப்புக்கொள்ளுமாறும் மதுவரித் திணைக்கள அதிகாரியொருவர் தங்களை வற்புறுத்தியதாக மற்றைய மூவரும் திறந்த நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.
இதனையடுத்து, மூவரையும் தலா 25 ஆயிரம் ரூபாய் ஆட்பிணையில் செல்ல அனுமதியளித்த நீதவான், வழக்கை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 2ஆம் திகதிக்கு ஒத்திவைத்ததுடன், அத்தினத்தில் கிளிநொச்சி மாவட்ட மதுவரித் திணைக்கள அதிகாரிகளை மன்றில் ஆஜராகுமாறும் நீதவான் உத்தரவிட்டார்.
'உயிராபத்தை எதிர்கொள்ளக்கூடிய ஒரு தொழிலாகக் காணப்படும் கள் இறக்கும் தொழிலை தங்களுடைய வாழ்வாதாரத்துக்காக மேற்கொண்டு வருகின்றதாகவும், முறையற்ற விதத்தில் தங்களை குறித்த அதிகாரிகள் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதன் மூலம் அதிகூடிய அபராதத்தைச் செலுத்தியிருப்பதாகவும் எதிர்காலத்;தில் இந்தத் தொழிலை தாங்கள் கைவிடப்போவதாகவும் சந்தேகநபர்கள் மன்றில் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
6 hours ago
7 hours ago