2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

மல்லாவி பொலிஸார் வசமிருந்த காணி உரிமையாளரிடம் ஒப்படைப்பு

George   / 2016 செப்டெம்பர் 17 , மு.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

முல்லைத்தீவு, மல்லாவிப் பொலிஸாரின் பயன்பாட்டில் இருந்த தனியார்; காணி அதன் உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு துணுக்காய் பிரதேச செயலாளர் பிரிவின் கீழ் உள்ள யோகபுரம் பகுதியில் தனியாருக்குச் சொந்தமான இண்;டு ஏக்கர் காணியினை கடந்த ஏழு ஆண்டுகளாக பொலிஸார் தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்ததுடன் குறித்த காணியில் உள்ள வீடு, மல்லாவி பொலிஸ் நிலையமாக இயங்கி வந்தது.

இந்நிலையில், காணி உரிமையாளர்; தனது காணியை தருமாறு கடந்த ஏழு வருடங்களாக பொலிஸார் மற்றும் துறைசார் அதிகாரிகளிடமும் கோரிக்கை விடுத்து வந்துள்ளதுடன் முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றில் வழக்குத்தாக்கல் செய்திருந்தார்;.

இந்நிலையில், குறித்த காணியையும் அதன் வீட்டையும் கடந்த புதன்கிழமை (14) அதன் உரிமையாளரிடம் ஒப்படைத்துள்ளனர்.

பிரதேச செயலகத்;தினால் வழங்கப்பட்ட 2.5 ஏக்கர் காணியில் பொலிஸ் நிலையம் அமைக்கப்பட்டு தற்போது மல்லாவி பொலிஸ் நிலையம் புதிய இடத்தில் இயங்க ஆரம்பித்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X