2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

‘முதல் மாதத்தில் 400 கி.கி கேரள கஞ்சா மீட்பு’

Editorial   / 2019 பெப்ரவரி 02 , பி.ப. 12:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த், எஸ்.நிதர்ஷன்

வடக்கில், இந்த ஆண்டின் முதல் மாதத்தில் மாத்திரம், சுமார் 400 கிலோகிராமுக்கு மேற்பட்ட கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதாகத் தெரிவித்த  வடக்கு சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் ரொஷான் பொர்ணான்டோ, அது தொடர்பாக 111 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முற்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

காங்கேசன்துறையில் இன்று காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார்.

மேலும் கடந்த ஆண்டில் 2,000க்கும் மேற்பட்ட கிலோகிராம் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டதாகவும் அதனோடு தொடர்புபட்டவர்கள் என்ற சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றங்களில் முற்படுத்தப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .