Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 28, சனிக்கிழமை
Gavitha / 2015 ஒக்டோபர் 01 , பி.ப. 02:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
நா.நவரத்தினராசா, செல்வநாயகம் கபிலன்
குப்புறபிரண்ட குழந்தையொன்று திரும்பிப்படுக்க முடியாமல் மூச்சுத்திணறி உயிரிழந்த சம்பவம், புதன்கிழமை (30) இரவு ஊரெழு பகுதியில் இடம்பெற்றுள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.
அதேயிடத்தைச் சேர்ந்த காந்தன் சந்தோஸ் என்ற 1 ½ மாத குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.
குழந்தையின் தாய், குழந்தைக்கு பால் கொடுத்துவிட்டு குழந்தையை தலையணையொன்றில் கிடத்திய பின்னர், உடைகளை கழுவுவதற்காக கிணற்றடிக்குச் சென்றுள்ளார்.
குழந்தையில் அருகில், தலையணைகளை வைக்காததன் காரணத்தினால், குழந்தை பிரண்டு குப்புற விழுந்து மூச்சுத் திணறி உயிரிழந்துள்ளது.
கிணற்றடியிலிருந்து வந்த தாய், குழந்தையின் உடல் குளிர்ந்திருந்ததை அவதானித்துவிட்டு உடனடியாக தனியார் வைத்தியசாலையொன்றுக்கு கொண்டு சென்றுள்ளார். அங்கு குழந்தைக்கு சிகிச்சையளிக்க மறுத்த நிலையில், குழந்தையை உடனடியாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குக் கொண்டு சென்றுள்ளார்.
எனினும், குழந்தை ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக யாழ். போதனா வைத்தியசாலையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 Jun 2025
27 Jun 2025
27 Jun 2025