2025 ஜூன் 28, சனிக்கிழமை

மோட்டார்சைக்கிள் மோதி வயோதிப பெண் உயிரிழப்பு

Princiya Dixci   / 2015 ஒக்டோபர் 02 , மு.ப. 05:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

சிறுப்பிட்டி பகுதியில் நேற்று வியாழக்கிழமை (01) மாலை சிறு வீதியிலிருந்து பிரதான வீதிக்கு நடந்து சென்ற வயோதிப் பெண்ணை மோட்டார் சைக்கிள் மோதி அந்தப் பெண் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளதாகவும் மோட்டார்சைக்கிளை செலுத்தி வந்த வயோதிபர் படுகாயமடைந்துள்ளதாகவும் அச்சுவேலி போக்குவரத்துப் பொலிஸார் தெரிவித்தனர்.

அதேயிடத்தைச் சேர்ந்த பொன்னம்மா நல்லம்மா (வயது 95) என்பவரே உயிரிழந்துள்ளதுடன், மோட்டார்சைக்கிள் செலுத்தி வந்த கொக்குவில் கிழக்குப் பகுதியைச் சேர்ந்த செல்லத்தம்பி சீவரத்தினம் (வயது 71) என்பவர் படுகாயமடைந்து யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .