Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Princiya Dixci / 2016 நவம்பர் 09 , மு.ப. 11:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.றொசாந்த்
புங்குடுதீவு மாணவி கொலை வழக்கின் சந்தேகநபர்களை, மேலும் மூன்று மாத காலத்துக்கு விளக்கமறியலில் தடுத்து வைக்க ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்றுக்கு, யாழ்.மேல் நீதிமன்றம், இன்று புதன்கிழமை (09) அனுமதி அளித்துள்ளது.
கடந்த ஆண்டு மே மாதம் 13ஆம் திகதி படுகொலை செய்யப்பட்ட புங்குடுதீவு மாணவியின் படுகொலை தொடர்பில் 12 சந்தேகநபர்கள் இதுவரைக் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டு உள்ளனர்.
அவர்களில் ஒன்பது சந்தேக நபர்களின் விளக்கமறியல் காலம் ஒரு வருடத்தை தாண்டியுள்ளது. அவர்களின் விளக்கமறியல் காலத்தை நீடிக்க, புதன்கிழமை (09) யாழ்.மேல் நீதிமன்றில் அனுமதி கோரப்பட்டு, ஒன்பது சந்தேக நபர்களும் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டனர்.
2 hours ago
5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
5 hours ago
5 hours ago