2025 ஜூன் 23, திங்கட்கிழமை

மாந்தை கிழக்கு பிரதேசம் இருட்டில் மூழ்கி கிடக்கிறது

Gavitha   / 2015 செப்டெம்பர் 02 , பி.ப. 12:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுப்பிரமணியம் பாஸ்கரன்

முல்லைத்தீவு, மாந்தை கிழக்கு கரும்புள்ளியான் பிரதேசத்துக்கு இதுவரை மின்சாரம் வழங்கப்படவில்லை எனவும் இக்கிராமத்துக்கு மின்இணைப்பை பெற்றுத்தருமாறு இந்தப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

யுத்தத்தின் பின்னரான முதலாவது மீள் குடியமர்வு, மாந்தை கிழக்குப் பிரதேசத்திலேயே இடம்பெற்;றுள்ளது. ஆறு ஆண்டுகளாகியும் இன்றுவரை இந்தப்பகுதிகளுக்கு மின்சாரம் வழங்கப்படவில்லை. குறித்த கிராமத்தில் 161 குடும்பங்கள் வாழ்;ந்து வருகின்றனர்.

வடக்;கின் வசந்தம் இலவச மின்ணிணைப்பு திட்டத்தின் கீழ் இப்பகுதிக்கான பிரதான மின் இணைப்பு வேலைகள் மேற்கொள்ளப்பட்டபோதும் வீடுகளுக்கான மின்சாரம் இதுவரை வழங்கப்;படவில்லை.

ஆகவே, மின்சாரத்தைப் பெற்றுத்தர உரியவர்கள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என மக்கள் தெரிவிக்கின்றனர்.

மின்சாரத்தை வழங்கக்கோரி மின்சார சபை மற்றும் பிரதேச செயலாளர் மாவட்;ட செயலர்  ஆகியோருக்கு கடிதங்களை கையளித்துள்ளதாகவும் இதற்கும் முன்னரும் கடிதங்களை கையளித்துள்ளதாகவும் முன்னாள் மாந்தை கிழக்கு பிரதேச சபையின் உறுப்பினர் ந.மகிந்தன் தெரிவித்துள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .