2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

மின் கசிவால் உணவகத்தில் தீ விபத்து

Niroshini   / 2016 பெப்ரவரி 03 , மு.ப. 06:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

பருத்தித்துறை, மந்திகை சந்திப் பகுதியில் உள்ள உணவகத்தில், செவ்வாய்க்கிழமை (02) இரவு ஏற்பட்ட தீ விபத்தில், 2 இலட்சம் ரூபாய் பெறுமதியான பொருட்கள்; சேதமடைந்துள்ளதாக பருத்தித்துறை பொலிஸார் தெரிவித்தனர்.

வழமை போன்று செவ்வாய்க்கிழமை (02) இரவு கடையை பூட்டிவிட்டு சென்ற உரிமையாளர் இன்று புதன்கிழமை அதிகாலை கடையை திறந்து பார்த்தபோது பொருட்கள் அனைத்தும் தீயில் எரிந்துள்ளன.

இச்சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட பருத்தித்துறை பொலிஸார், மின்சுற்றில் ஏற்பட்ட கசிவே இத் தீ விபத்துக்கு காரணம் என தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X