2025 ஜூன் 28, சனிக்கிழமை

யாழ். குடாநாட்டில் டெங்கு நோய் தொற்று அதிகரிப்பு

Editorial   / 2017 டிசெம்பர் 19 , பி.ப. 02:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

யாழ். குடாநாட்டில் டெங்கு நோய் தொற்று அதிகரித்து காணப்படுவதாக, யாழ்.மாவட்ட சுகாதார திணைக்கள அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், 

“யாழில், இந்த மாதம் 13ஆம் திகதி வரையிலான 13 நாட்களில், 311 பேர் டெங்கு நோய் தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக இனம் காணப்பட்டுள்ளனர். கடந்த நவம்பர் மாதம் 480 பேர் டெங்கு நோய் தொற்றுக்கு உள்ளாகியிருந்தனர். 

“டெங்கு நோயை கட்டுப்படுத்தும் செயற்றிட்டங்கள் தற்போது தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. விசேடமாக யாழ்ப்பாணம், சாவகச்சேரி, நல்லூர், கோப்பாய், உடுவில் - சங்கானை, கரவெட்டி - சண்டிலிப்பாய், பருத்தித்துறை மற்றும் தெல்லிப்பளை ஆகிய சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்கு உட்பட்ட பகுதிகளில் முன்னெடுக்கப்பட்டுள்ளன. 

“அதனால் தற்போது ஓரளவுக்கு டெங்கு நோய் தொற்று, கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது” என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .