2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள், 9 பேருக்கு விளக்கமறியல்

எம். றொசாந்த்   / 2018 ஜனவரி 24 , பி.ப. 04:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்.பல்கலைக்கழக முகாமைத்துவ பீட 3ஆம் வருட பெரும்பான்மையின மாணவர்கள் 9 பேரை நாளை வியாழக்கிழமை (25) வரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்.நீதவான் நீதிமன்ற நீதவான் எஸ்.சதீஸ்தரன் இன்று (24) உத்தரவிட்டார்.

4ஆம் வருட மாணவர்கள் இருவரைத் தாக்கிய குற்றச்சாட்டிலேயே அவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 18ஆம் திகதி இரவு, யாழ். பல்கலைக்கழக முகாமைத்துவ பீட 4ஆம் வருட மாணவர்களுக்கும் 3 ஆம் வருட மாணவர்களுக்கும் இடையில் கைகலப்பு இடம்பெற்றது.

இந்நிலையில், விசாரணைகளை மேற்கொண்ட கோப்பாய் பொலிஸார் 3 ஆம் வருட மாணவர்கள் 4 பேரை கைது செய்து யாழ்.நீதவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தினர்.

இதன்போது, 4 பேரையும் எதிர்வரும் 25 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கடந்த திங்கட்கிழமை (22) நீதவான் உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில், குறித்த கைகலப்புடன் தொடர்புடைய 3ஆம் வருட  மாணவர்கள் 9 பேர் இன்று (24) கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்தனர்.

குறித்த மாணவர்களை நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தியபோது, அவர்களை நாளை (24) வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .