2025 ஜூன் 23, திங்கட்கிழமை

யாழில் கைக்குண்டு மீட்பு

Princiya Dixci   / 2015 செப்டெம்பர் 02 , மு.ப. 06:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

எழுதுமட்டுவாழ் பகுதியிலுள்ள காணியொன்றில் இருந்து வெடிக்கக் கூடிய நிலையில் இருந்த கைக்குண்டு, நேற்று செவ்வாய்க்கிழமை (01) இராணுவத்தினரால் மீட்கப்பட்டுள்ளதாக கொடிகாமம் பொலிஸார் தெரிவித்தனர்.

அப்பகுதியில் உள்ள ஒருவர் தனது காணியை துப்பரவு செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த போது, மேற்படி கைக்குண்டு தென்பட்டுள்ளது.

இது தொடர்பில் காணி உரிமையாளர், பொலிஸாருக்கு தெரியப்படுத்தியதையடுத்து, இராணுவத்தினரின் குண்டு செயலிழக்கும் பிரிவினருக்கு தெரியப்படுத்தி அவர்களின் உதவியுடன் மீட்கப்பட்டதாக கொடிகாமம் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .