Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 26, வியாழக்கிழமை
Princiya Dixci / 2015 செப்டெம்பர் 22 , மு.ப. 05:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
- எம்.றொசாந்த்
வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் ஒன்றிணைந்து கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபையின் முன்பாக இன்று செவ்வாய்க்கிழமை (22) கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.
வாயில் கதவை மறைத்து மேற்கொள்ளப்படும் இந்த ஆர்ப்பாட்டத்தால் முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் ஆகியோர் வடமாகாண சபை அமர்வில் கலந்துகொள்ளச் செல்ல முடியாமல் வீதியில் நிற்கின்றனர்.
கடந்த 7ஆம் திகதி யாழ். மாவட்ட செயலகத்துக்கு முன்பாக மேற்கொள்ளப்பட்ட கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் போது, வடமாகாண பட்டதாரிகளை வேலைவாய்ப்புக்களுக்கு உள்ளீர்ப்புச் செய்யுமாறு கோரி வடமாகாண ஆளுநர் எச்.எம்.ஜி.எஸ்.பள்ளிஹக்கார, வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், யாழ். மாவட்ட செயலர் நாகலிங்கன் வேதநாயகன் ஆகியோரிடம் மகஜர்கள் கையளிக்கப்பட்டன.
இரண்டு வார கால அவகாசம் வழங்கப்பட்டும் இதுவரை அவர்களிடமிருந்து சாதகமான பதில்கள் எதுவும் வழங்கப்படவில்லையெனவும் இதனையடுத்தே இந்த போராட்டம் முன்னெடுக்கப்படுவதாக பட்டதாரிகள் தெரிவித்தனர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வடமாகாண சபைக்குள் நுழைய முற்பட்ட போதும், அதற்கு காவலாளிகள் அனுமதிக்காமையால் வாயில் பகுதியில் நின்று தங்கள் போராட்டத்தை முன்னெடுக்கின்றனர்.
வடமாகாண சபையின் மாதாந்த அமர்வு இன்று நடைபெறுகின்ற நிலையில் இதில் கலந்துகொள்ள வருகை தந்த முதலமைச்சர், மாகாண அமைச்சர்கள் மற்றும் உறுப்பினர்கள் உள்ளே செல்ல முடியாதவாறு மறித்து, மாணவர்கள் தங்கள் போராட்டத்தை முன்னெடுக்கின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
45 minute ago
5 hours ago
5 hours ago