Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 26, வியாழக்கிழமை
Editorial / 2018 ஜனவரி 31 , மு.ப. 06:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
- எம்.றொசாந்த், எஸ்.நிதர்ஷன், எஸ்.ஜெகநாதன்
யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பகுதியில் உள்ள வயற் கிணற்றிலிருந்து பெருமளவான நேற்று (30) ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன என வட்டுக்கோட்டை பொலிஸார் தெரிவித்தனர்.
வட்டுக்கோட்டையில், இருந்து யாழ்ப்பாணம் நோக்கி செல்லும் வீதியில் யாழ்ப்பாண தொழில்நுட்ப கல்லூரிக்கு அண்மையில் உள்ள வயற் காணியொன்றின் கிணற்றிலிருந்து குறித்த ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன.
குறித்த வயற்காணியில் உள்ள கிணற்றில் நீர் இறைத்த போது, கிணற்றில் நீரானது வற்றவே கிணற்றுக்குள் இருந்த ஆயுதங்கள் வெளியே தென்பட்டுள்ளன.
இதனையடுத்து, காணி உரிமையாளர் வட்டுக்கோட்டை பொலிஸாருக்கு தகவல் வழங்கியிருந்தார். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் பொலிஸ் விஷேட அதிரடிப் படையினருக்கும் தகவல் வழங்கியிருந்தனர்.
இதன்படி பொலிஸார் மற்றும் விஷேட அதிரடிப் படையினர் இணைந்து ஆயுதங்களை மீட்டிருந்தனர். இவற்றில் ரி-56 துப்பாக்கிக்கு பயன்படும் ரவைகள் ஒரு தொகை, அவற்றோடு 60 மில்லி மீற்றர் நீளமான மோட்டார் குண்டுகள் சில, ஆர்.பி.ஜீ குண்டு ஒன்று மற்றும் ரொக்கட் லோன்ஜர் வகை சார்ந்த குண்டுகளும் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மீட்கப்பட்ட ஆயுதங்களில் பல பழையதாக காணப்பட்டதாகவும் சில ஆயுதங்கள் புதிய ஆயுதங்கள் போல காணப்பட்டதாகவும் பொலிஸார் குறிப்பிட்டிருந்தனர். மேலும் மீட்கப்பட்ட ஆயுதங்கள் தொடர்பாகவும், அவை எக் காலத்தற்குரியது யாரால் பயன்படுத்தப்பட்டது என்பது தொடர்பான விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் வட்டுக்கோட்டை பொலிஸார் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
50 minute ago
1 hours ago
1 hours ago
2 hours ago