2025 ஜூன் 23, திங்கட்கிழமை

வரட்சியினால் கால்நடைகளுக்கு கால்வாய் நோய்

Gavitha   / 2015 செப்டெம்பர் 02 , பி.ப. 12:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி மாவட்டத்தில் தற்போது நிலவும் வரட்சியினால் கால்நடைகள் நோய்த்தாக்கத்துக்;கு உள்ளாகி வருவதாக பண்ணையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இதற்கு தடுப்பு மருந்துகளை பயன்படுத்துகின்ற போதும் நோய்த்தாக்கங்கள் குறைவதாக இல்;லை என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

 யுத்தத்தினால் கால்நடைகள் அழிந்து போன ஒரு மாவட்டமாக காணப்பட்ட கிளிநொச்சி மாவட்டத்தில் மக்கள் மீள்குடியமர்வின் பின்னர் 40 ஆயிரம் வரையான மாடுகள், 7 ஆயிரம் வரையான ஆடுகள், 2 இலட்சம் வரையான கோழிகள், ஆயிரம் எருமை மாடுகளும் உள்ளன.

இந்நிலையில், தற்போது நிலவுகின்ற வரட்சி காரணமாக கால்நடைகளுக்கு கால்வாய் நோய் ஏற்பட்டு வருவதுடன் கிளிநொச்சி கனகாம்பிகைக்குளம், இரணைமடு, கல்மடுநகர்;, கல்மடு ஆகிய பகுதிகளில் நோய்;களால் கால்நடைகள் இறக்கின்ற நிலை காணப்படுகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .