Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 22, ஞாயிற்றுக்கிழமை
Gavitha / 2015 ஓகஸ்ட் 27 , பி.ப. 12:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.ஜெகநாதன்
வறுமை காரணமாக பாடசாலையை விட்டு விலகிய மற்றும் விலகவுள்ள 500 மாணவர்களுக்கு, அவர்களின் கற்றல் நடவடிக்கையை தொடர்ந்து மேற்கொள்ளும் பொருட்டு யாழ்ப்பாணம் வணிகர் சங்கத்தின் ஏற்பாட்டில் 1 மில்லியன் ரூபாய் பெறுமதியான கற்றல் உபகரணங்கள் யாழ்ப்பாணம் பிரதேச செயலகத்தில் வைத்து வியாழக்கிழமை (27) வழங்கப்பட்டன.
வறுமை காரணமாக பாடசாலைக்குச் செல்லாமல் இருக்கும் பிள்ளைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளமையால், அவ்வாறான நிலையை மாற்ற வேண்டும் என்ற நோக்கில் வணிகர் சங்கத்தால் கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், யாழ். வணிகர் சங்கத் தலைவர் இ.ஜெயசேகரம், யாழ்.மாவட்ட மேலதிக செயலாளர் பா.செந்தில்நந்தனன், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் பொன்.பாலசுந்தரம்பிள்ளை ஆகியோர் அதிதிகளாகக் கலந்துகொண்டு உபகரணங்களை வழங்கினர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .