2025 ஜூன் 25, புதன்கிழமை

வவுனியா பொது வைத்தியசாலை பணிப்பாளரின் சேவை தொடர்ந்து தேவை

Gavitha   / 2015 செப்டெம்பர் 14 , பி.ப. 12:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

நவரத்தினம் கபில்நாத்

வவுனியா வைத்தியசாலை பணிப்பாளர் கு.அகிலேந்திரன் தொடர்ந்தும்  வவுனியா வைத்தியசாலை பணிப்பாளராக பணியாற்ற வேண்டும் என வவுனியா மாவட்ட பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வவுனியா மாவட்ட வைத்தியசாலை சிறந்த வைத்தியசாலையாக தற்போது மாற்றம் பெற்றுள்ளது. வவுனியா மாவட்ட நோயாளர்கள் மட்டுமன்றி ஏனைய பகுதிகளில் இருந்து கூட நோயாளர்கள் வந்து சிகிச்சை பெறக் கூடிய வகையில் இது வளர்ச்சி பெற்றுள்ளது. இவ் வைத்தியசாலையானது மாகாண வைத்தியசாலையாக தரம் உயர்த்தப்படவுள்ளமைக்கும், சகல வசதிகளுடன் கூடிய வைத்தியசாலையாக மாற்றம் பெறுவதற்கும் இவ் வைத்தியசாலையின் பணிப்பாளர் ஆகிய  கு.அகிலேந்திரன் அவர்களின் செயற்பாடே காரணமாகும்.

மருத்துவ துறையில் நிர்வாக கற்கையை நிறைவு செய்த இவர் தற்போது கொரிய நாட்டில் புலமைப்பரிசில் கிடைத்து, அங்கு சென்று பயிற்சியை நிறைவு செய்து மீள இலங்கை திரும்பியுள்ளார்.   

இந்நிலையில் மருத்துவ துறை தொடர்பாக அனுபவமும் தேர்ச்சியும் பெற்றுள்ள இவர் தொடர்ந்தும் எமது வைத்தியசாலையில் பணியாற்றுவதன் மூலம் எமது வைத்தியசாலை மேலும் வளர்ச்சியடையும்.

எனவே அவரே எமது வைத்தியசாலை பணிப்பாளராக தொடர்ந்தும் பணியாற்ற வேண்டும். இது தொடர்பில் வடமாகாண மற்றும் மத்திய சுகாதார அமைச்சுக்கள் கவனம் செலுத்த வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .