2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

விடுதலை செய்யப்பட்டவரின், பிணை தொடர்பான விசாரணை ஒத்திவைப்பு

எம். றொசாந்த்   / 2018 ஜனவரி 24 , பி.ப. 05:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

புங்குடுதீவு மாணவி படுகொலை வழக்கில், ரயலட்பார் நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டும், தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பூபாலசிங்கம் இந்திரகுமார் சார்பில், சட்ட உதவி ஆணைக்குழுவின் சட்டத்தரணியால், தாக்கல் செய்யப்பட்ட எழுத்து மூல விண்ணப்பம் தொடர்பான விசாரணைகளை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 7 ஆம் திகதி வரை ஒத்திவைக்குமாறு ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.எம்.எம்.றியால் இன்று (24) உத்தரவிட்டார்.

சிவலோகநாதன் வித்தியா கொலை வழக்கில், முதலாவது சந்தேகநபராக கைது செய்யப்பட்ட பூபாலசிங்கம் இந்திரகுமார், ரயலட்பார் நீதிமன்றத்தால் நிரபராதியாக விடுதலை செய்யப்பட்டார். எனினும், பொலிஸார் ஒருவரை அச்சுறுத்திய வழக்கில் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், குறித்த வழக்கு இன்று (24) ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது, சட்ட உதவி ஆணைக்குழுவின் சட்டத்தரணி, குறித்த நபருக்கு பிணை வழங்குவது தொடர்பாக எழுத்து மூல விண்ணப்பத்தை தாக்கல் செய்தார்.

இதனையடுத்து, குறித்த எழுத்து மூல விண்ணப்பத்துக்கான கட்டளையை வழங்குவதுக்காக, இவ்வழக்கு விசாரணையை எதிர்வரும் 7 ஆம் திகதி வரை ஒத்திவைக்குமாறு, அதுவரை குறித்த நபரை விளக்கமறியலில் வைக்குமாறும் நீதிவான் உத்தரவிட்டார்.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .