2025 ஜூன் 30, திங்கட்கிழமை

விபத்தில் இருவர் பலி

Editorial   / 2017 நவம்பர் 27 , பி.ப. 12:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த், டி.விஜிதா

யாழ்ப்பாணம், சாவகச்சேரி, நுணாவில் பகுதியில் நேற்று  (26) இரவு 9.30 மணியளவில், சொகுசு பஸ்ஸூம் மோட்டார் சைக்கிளும் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

நுணாவிலை சேர்ந்த யோ. சபேஸ்குமார் (வயது 35) மற்றும் அதேயிடத்தை சேர்ந்த க.மோகன் (வயது 34) ஆகிய இருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

யாழில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த சொகுசு பஸ்ஸூம், சாவகச்சேரியில் இருந்து நுணாவில் நோக்கி சென்ற மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியதாலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்து தொடர்பிலான விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X