2025 மே 19, திங்கட்கிழமை

விபத்தில் படுகாயமடைந்த பெண் உயிரிழப்பு

Editorial   / 2019 ஜனவரி 10 , மு.ப. 11:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

செந்தூரன் பிரதீபன்

தெல்லிப்பளை துர்க்கையம்மன் ஆலயத்துக்கு அருகில் நேற்று (09) இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த பெண் சிகிக்சை பலனின்றி இரவு உயிரிழந்துள்ளதாக தெல்லிப்பளை பொலிஸார் தெரிவித்தனர்.

கோண்டாவில் மேற்கு பகுதியைச் சேர்ந்த நாகராஜா இராஜலட்சுமி (வயது 54) என்ற 5 பிள்ளளைகளின் தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கணவனுடன் மயிலிட்டி பகுதியில் உள்ள தமது காணிகளை பார்வையிட்டுவிட்டு மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பியபோது பிறிதொரு மோட்டார் சைக்கிளுடன் மோதி இடம்பெற்ற விபத்தில் குறித்த பெண் படுகாயமடைந்துள்ளார்.

யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி இரவு உயிரிழந்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X