2025 ஜூன் 26, வியாழக்கிழமை

வேட்பாளர் உதயசிறி கைது

எம். றொசாந்த்   / 2018 ஜனவரி 26 , பி.ப. 05:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாணம் மாநகர சபைக்கான தேர்தலில், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் உதயசிறியை இன்று (26) கைது செய்துள்ளதாக யாழ்ப்பாண பொலிஸார் தெரிவித்தனர்.

யாழ்ப்பாணம் பண்ணைப் பகுதியில் இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பிலேயே உதயசிறி உள்ளிட்ட 6 பேர் கைது செய்யப்பட்டனர் என பொலிஸார் தெரிவித்தனர்.

யாழ்ப்பாணம் பண்ணைப் பகுதியில் வைத்து, கடந்த 24 ஆம் திகதி வேட்பாளர் உதயசிறி தாக்கப்பட்டார் என முறைப்பாடு கிடைக்கப்பெற்றமைக்கு அமைய நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.


அவர்கள் நான்கு பேரிடமும் நடத்திய விசாரணைகளின் அடிப்படையில் உதயசிறி மற்றும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .