2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

வீடு தீக்கிரை

Niroshini   / 2016 ஜனவரி 26 , மு.ப. 06:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சண்முகம் தவசீலன்

முல்லைத்தீவு, அளம்பில் தெற்கு யாழ். வீதியில் திங்கட்கிழமை(25) இரவு 7 மணியளவில், வீடொன்று தீக்கிரையாகியுள்ளது.

அளம்பில் சந்தி பகுதியில் தையல் நிலையம் ஒன்றை நடத்திவரும் யாழ். வீதி அளம்பில் தெற்கை சேர்ந்த, கண்ணையா வியஜராசா என்பவருடைய வீடே இவ்வாறு தீக்கிரையாகியுள்ளது.

வீட்டில் யாரும் இல்லாத வேளையிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

நிரந்தர வீட்டுக்கான வேலைகள் நடைபெற்று வருவதன் காரணமாக குறித்த நபர், தனது குடும்பத்துடன் தற்;காலிகமாக வீடொன்றில் வசித்து வந்த நிலையிலேயே, இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதனால், வீட்டில் இருந்த  ஒரு இலட்சம் பணம், 10பவுணுக்கும் மேற்பட்ட நகை, இலத்திரனியல் உபகரணங்கள், தளபாட பொருட்கள் உள்ளிட்ட பொருட்கள் தீயில் எரிந்து நாசமாகியுள்ளன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X