2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

வீதியில் குழப்பம் விளைவித்தவர்கள் மீது பொலிஸார் தாக்குதல்

George   / 2015 ஒக்டோபர் 09 , மு.ப. 09:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நா.நவரத்தினராசா

ஏழாலை வடக்குப் பகுதியில் வியாழக்கிழமை (08) இரவு மதுபோதையில் நின்று குழப்பம் விளைவித்தவர்களை, சிவில் உடையில் சென்ற பொலிஸார் தாக்கியதையடுத்து, குழப்பம் விளைவித்தவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனர்.

சுமார் 20 வயது மதிக்கத்தக்க இரண்டு இளைஞர்கள் மதுபோதையில் நின்று, வீதியில் செல்வோரை தகாத வார்த்தைகளால் திட்டியும், தங்களுக்கிடையில் சண்டையிட்டுக்கொண்டும் நின்றுள்ளனர்.

இருவரது செயலையும் அவ்வழியாகச் மோட்;டார் சைக்கிளில் சென்ற பொலிஸ் உத்தியோகத்தர்கள் கண்டு, அவர்கள் மீது தாக்குதல் நடத்தியதில் அவர்கள் அங்கிருந்து தப்பித்துச் சென்றுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X