Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை
Sudharshini / 2015 ஒக்டோபர் 10 , மு.ப. 11:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
நா.நவரத்தினராசா
கடந்த 01 ஆம் திகதி மோட்டார் சைக்கிள் மோதி படுகாயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பெண் சிகிச்சை பலன் இன்றி, வெள்ளிக்கிழமை (09) உயிரிழந்துள்ளார் என யாழ். போதனா வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
கோண்டாவில் வடக்கைச் சேர்ந்த சண்முகம் கமலா (வயது 65) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
கடந்த 01 ஆம் திகதி திருநெல்வேலி சந்தையில் பொருட்களை வாங்கிக்கொண்டு, பலாலி வீதியை கடக்க முற்பட்டவேளை வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் மோதியதில் படுகாயமடைந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
நீதிமன்ற பணிப்புரைக்கு அமைவாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிரேம்குமாரினால் மேற்கொள்ளப்பட்ட மரண விசாரணையைத் தொடர்ந்து சடலம் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை கோப்பாய் பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
25 minute ago
2 hours ago
4 hours ago