2025 ஜூன் 25, புதன்கிழமை

விழிப்புலனற்றோருக்கு உலர்உணவுப் பொதிகள்

Sudharshini   / 2015 செப்டெம்பர் 15 , மு.ப. 06:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

- நா.நவரத்தினராசா

வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தின் சமூக உதவித்திட்டத்தின் கீழ், வன்னி விழிப்புலனற்றோர் சங்கத்தைச் சேர்ந்தவர்களுக்கு 80 ஆயிரம் ரூபாய் பெறுமதியான உலர் உணவுப் பொருட்கள் திங்கட்கிழமை (14) வழங்கப்பட்டுள்ளன.

வன்னி விழிப்புலனற்றோர் சங்கத்தில் இரு கண்களையும் இழந்த 20 பெண்கள் தலைமைத்துவக் குடும்பங்களும், போரால் இரு கண்களையும் இழந்த 97 உறுப்பினர்களும் அங்கத்தவர்களாக உள்ளனர்.

இவர்களின் வாழ்வாதார தேவையைக் கருத்திற்கொண்டு, புலம்பெயர் நாடுகளிலிருந்து கிடைக்கப்பெற்ற நிதியுதவியில் இந்த உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது.

 

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .