Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Niroshini / 2016 பெப்ரவரி 19 , மு.ப. 10:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.றொசாந்த்
புங்குடுதீவு மாணவி படுகொலை வழக்கு தொடர்பில் குற்றப்புலனாய்வு பொலிஸார் இதுவரையில் மேற்கொண்ட விசாரணை அறிக்கையை, அடுத்த வழக்குத் தவணையில் கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும் என ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்ற நீதவான் ஏம்.எம்.எம்.றியால் இன்று வெள்ளிக்கிழமை (19) கடுமையான உத்தரவை பிறப்பித்துள்ளார்.
புங்குடுதீவு மாணவி படுகொலை வழக்கு, இன்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது, இந்த வழக்கு ஆரம்பிக்கப்பட்டு இவ்வளவு காலமாகியும் எவ்வித அறிக்கைகளையும் குற்றப்புலனாய்வு பொலிஸார் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கவில்லை என சுட்டிக்காட்டிய நீதவான், அடுத்த தவணையான எதிர்வரும் மார்ச் மாதம் 4 ஆம் திகதி விசாரணை அறிக்கைகள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவேண்டும். தவறும் பட்சத்தில் நீதிமன்றம் மேலதிக உத்தரவை பிறப்பிக்கும் என கூறினார்.
இதேவேளை, சந்தேகநபர்கள் தங்கள் கருத்துக்களை நீதிமன்றத்தில் முன்வைக்க முயன்றபோதும், நீங்கள் உங்கள் சட்டத்தரணியூடாகவே முன்வைக்க முடியும் என நீதவான் தெரிவித்தார்.
51 minute ago
57 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
51 minute ago
57 minute ago