2025 ஒக்டோபர் 02, வியாழக்கிழமை

35 இந்திய மீனவர்களின் விளக்கமறியல் நீடிப்பு

Sudharshini   / 2015 டிசெம்பர் 23 , பி.ப. 12:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

செல்வநாயகம் கபிலன்

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 35 இந்திய மீனவர்களையும் தொடர்ந்தும் எதிர்வரும் ஜனவரி மாதம் 4ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்ற நீதவான் செல்வநாயகம் லெனின்குமார் இன்று புதன்கிழமை (23) உத்தரவிட்டார்.

கடந்த நவம்பர் 18ஆம் திகதி, 3 படகுகளுடன் கைது செய்யப்பட்ட இராமநாதபுரம் பகுதியைச் சேர்ந்த 14 மீனவர்களும், கடந்த நவம்பர் மாதம் 26ஆம் திகதி 2 படகுகளுடன் கைது செய்யப்பட்ட இராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த 9 மீனவர்களும், கடந்த நவம்பர் மாதம் 29ஆம் திகதி 2 படகுகளுடன் கைது செய்யப்பட்ட இராமநாதபுரத்தைச் சேர்ந்த 8 மீனவர்களும் (16 வயதுச் சிறுவன் உட்பட), இம்மாதம் 18ஆம் திகதி ஒரு படகுடன் கைது செய்யப்பட்ட ஜெகதாப்பட்டிணத்தைச் சேர்;ந்த 4 இந்திய மீனவர்களுமே இவ்வாறு தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.

இவர்கள் அனைவரும் நெடுந்தீவுக்கு அண்மிய கடற்பரப்பில் வைத்து கடற்படையினரால் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X