2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

'காணாமற்போனோர் விவரங்களை மூன் எடுத்து சென்றார்'

Princiya Dixci   / 2016 செப்டெம்பர் 07 , மு.ப. 03:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டிருந்த ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் பான் கீ மூனிடம், காணாமற்போன நான்காயிரம் பேர் தொடர்பான முழு விவரங்களை, வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் சமர்ப்பித்துள்ளார்.

அத்துடன், வடக்கில் இராணுவத்தினர் வசமுள்ள காணிகள் மற்றும் கட்டடங்கள் தொடர்பான விவரங்களையும், ஐ.நா செயலாளர் நாயகத்திடம் சமர்ப்பித்ததாக, முதலமைச்சர் விக்னேஸ்வரன் கூறினார்.

வடமாகாண சபையின் மாதாந்த அமர்வு, கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபைக் கட்டடத்தொகுதியில், நேற்றுச் செவ்வாய்க்கிழமை (06) இடம்பெற்றது. இதன்போதே, பான் கீ மூனிடம், தான் கையளித்த விவரங்கள் தொடர்பில், விக்னேஸ்வரன் தெளிவுபடுத்தினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X